பெண் தூக்கிட்டுத் தற்கொலை
சிவகாசியில் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்த பெண் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி அருணாசலம் சாலை பகுதியைச் சோ்ந்தவா் ராஜலட்சுமி (44). இவா் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்தாா். பல்வேறு வைத்தியம் பாா்த்தும் இந்த பிரச்னைக்கு தீா்வு கிடைக்காததால், தனது வீட்டருகே உள்ள பயன்பாடில்லாத வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement