பாரதி ஒரு தீர்க்கதரிசி என்பார்கள். கலாம் ஒரு பாரதிக் காதலர். கடலோரப் பறவைகளைக் கண்டு பறப்பதில் ஆர்வம் கொண்டு சிறு வயதிலேயே பாரதி போல் கவிதையிலும் ஆர்வம் ஏற்பட்டு விட்டது. அவர் எழுதிய கவிதைகிளை தமிழாசிரியர்கள் பிறரிடம் காட்டி மகிழ்வதுண்டாம். தமிழில் அவர் எழுதிய "எனது பயணம்' என்ற நூல் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது.கலாம் படித்ததில் பிடித்த மூன்று ஆங்கில நூல்களும் சுயசரிதைகள்.
அவற்றுள் ஒன்று தத்துவஞானி ஒருவருடையது. மற்றவை இரண்டும் விஞ்ஞானியர் வாழ்க்கை வரலாறுகள். சர்.சி.வி.ராமன் பற்றி ஜி.வெங்கட்ராமன் எழுதிய நூலும், விஞ்ஞானி சந்திரசேகர் பற்றி காமேஸ்வரர் வாலி எழுதிய நூலும் என்னை கவர்ந்தவை என்று அவர் கூறியுள்ளார்.
-நெல்லை சு.முத்து