முகப்பு
மகளிர்மணி

முதல் படம் எது என்ற குழப்பத்தில் சாரா 

சயீப் அலிகான் - அம்ரிதா சிங்கின் மகளான சாரா அலிகான், முதன்முதலாக "கேதார்நாத்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

Updated On : 18 ஏப்ரல் 2018, 10:05 am IST
பகிர்:

சயீப் அலிகான் - அம்ரிதா சிங்கின் மகளான சாரா அலிகான், முதன்முதலாக "கேதார்நாத்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படம் அடுத்த ஆண்டு தான் வெளியாகுமென தெரிகிறது. இதற்கிடையில் கரண் ஜோகர் தயாரிப்பான "சிம்பா' வில் ரண்வீர் சிங்குடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததோடு. சிம்பாவும் இந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி வெளியாகுமென்ற அறிவிப்பும் வந்துள்ளது. ஆனால் "கேதார்நாத்' பட தயாரிப்பாளர்களோ முதன்முதலில் சாராவை அறிமுகபடுத்த நாங்கள்தான் ஒப்பந்தம் செய்தோம். கேதார்நாத்திற்கு பிறகே சிம்பாவை வெளியிட வேண்டுமென்று கேட்டுள்ளார்களாம். இதனால் முதன்முதலாக அறிமுகமாகும்போதே பிரச்னையா என்ற பதற்றத்தில் இருக்கிறார் சாரா அலிகான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.