முகப்பு
மகளிர்மணி

பழங்களின் பயன்கள்...

நாம் உண்ணும் பழங்கள் பல நமக்கு பல சத்துகளைத் தருகின்றன. பழங்களும், பயன்களும்...

Updated On : 4 பிப்ரவரி 2024, 12:00 am IST
பகிர்:


நாம் உண்ணும் பழங்கள் பல நமக்கு பல சத்துகளைத் தருகின்றன. பழங்களும், பயன்களும்...

வாழைப்பழம்: தயிருடன் சேர்த்து உண்ணக் கூடாது. பேயன் வாழைப்பழம் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும்.  மலை வாழைப்பழம் ஆண் மலடை நீக்கும்.

புளியம்பழம்: மது போதையால் ஏற்படும் விஷத்தைப் போக்கும். புளிப்புள்ள பழங்களை எப்போதும் தனித்தே சாப்பிட வேண்டும்.

Advertisement

Advertisement

நாவல் பழம்: ரத்தத்தைப் பெருக்கும். உள்வெப்பத்தை அடக்கும்  நீர்வேட்கையை நீக்கும். பசியை உண்டாக்கி வயிற்றுப் போக்கை நிறுத்தும்.

பேரீச்சம் பழம்: பித்த ரோகம், மல பந்தம்போகும். நரம்புத் தளர்ச்சியும் குணமாகும். ரத்த விருத்தி ஏற்படும். உடல் வளர்ச்சி பெறும்.

திராட்சைப் பழம்:  உடல் குளிர்ச்சி பெறும். சுக்கில விருத்தியும் ரத்த விருத்தியும் உண்டாகும். இதயத்தில் உள்ளகுறைபாடுகள் நீங்கும்.

கிச்சிலிப் பழம்:  "போஜன் கஸ்தூரி என்பது இதன் பெயர். ரத்தத்தைச் சுத்தம் செய்யும்.  உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் பித்தத்தைக் குறைத்து, ஆரோக்கியம், ஜீரணச் சக்தியை அளிக்கும். இருமல், சர்க்கரை, மார்பு நோய், ஈரல் நோய்கள் குணமாகும்.

மங்குஸ்தான் பழம்: நாள்பட்ட கழிச்சல், சீதக் கழிச்சல், வெள்ளை ஆகியன தீரும். பழத்தை வேகவைத்துப் பிழிந்து எடுத்த சாற்றை நெருப்பில் வற்ற வைத்து சர்க்கரை கலந்து பாகு செய்து உள்கொள்ள நாட்பட்ட கழிச்சல் நீங்கும்.

குறட்டாம் பழம்: தலைக்கு தைலமாகத் தேய்த்துப் பயன்படுத்த மூளைக்கட்டி, மூளைப் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

தர்பூசணி பழம்: தாகத்தைத் தணிக்கும். சிறுநீர்க் கோளாறுகளை அகற்றும். குடலுக்கு நல்ல பலனளிக்கும். பசியின்மை, அஜீரணம் நீங்கும்.

ஆரஞ்சுப் பழம்: குடலுக்கும் உடலுக்கும் நன்மை செய்யும். பல் நோய், சரும நோய், மூத்திரக் கோளாறுகள் நீங்கும், ஜீரணச் சக்தியை அபிவிருத்தி செய்யும்.

வேப்பம் பழம்:  இதன் ரசத்தை எடுத்து மணப்பாகு செய்து உட்கொண்டால் தோல் நோய்கள் குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments