அரி நெல்லிக்காய் சாதம்
பச்சரிசியை தேவையான தண்ணீர் விட்டு குக்கரிலோ பானையிலோ போட்டு அடுப்பில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
தேவையான பொருள்கள்:
பச்சரிசி -250 கிராம்
அரிநெல்லிக்காய் -20
பச்சை மிளகாய் -10
கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு- தலா 3 தேக்கரண்டி
மஞ்சள் பொடி, பெருங்காயத்தூள், கடுகு -தலா ஒரு தேக்கரண்டி
எண்ணெய், பொடி உப்பு- தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியை தேவையான தண்ணீர் விட்டு குக்கரிலோ பானையிலோ போட்டு அடுப்பில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நெல்லிக்காய் கொட்டைகளை நீக்கி சற்று கரகரப்பாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் கடுகு தாளித்துக் கொண்டு கடலைப் பருப்பு, உளுந்தம்பருப்பு போட்டு வறுபட்டவுடன் நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு பெருங்காயத்தை சேர்த்து வதக்கி சாதத்தில் போட வேண்டும். சாதத்தில் அரைத்த நெல்லிக்காய் விழுது, உப்பு, மஞ்சள் பொடியும் முதலில் போட்டு நன்றாகக் கலந்து எடுக்க வேண்டும். புளிப்பும் காரமும் கூடுதலாக வேண்டுபவர்கள் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளலாம்.