முகப்பு
மகளிர்மணி

தேன் மிட்டாய்

வாணலியை அடுப்பில் வைத்து சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கம்பி பதம் வரும் அளவுக்குப் பாகு காய்ச்சவும்.

Updated On : 24 மே 2026, 4:10 am IST
தேன் மிட்டாய்
பகிர்:

தேவையான பொருள்கள்:

சர்க்கரை -1கிண்ணம்

புளிக்காத இட்லி மாவு -1கிண்ணம்

Advertisement

Advertisement

சமையல் சோடா -1/4 மேஜைக்கரண்டி

ஆரஞ்சு கலர் பவுடர் -1/4 மேஜைக்கரண்டி

எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கம்பி பதம் வரும் அளவுக்குப் பாகு காய்ச்சவும். ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு, சோடா உப்பு, கலர் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் மாவு கலவையை சிறு, சிறு உருண்டைகளாக போட்டு நன்றாக வெந்தவுடன் எடுத்து, சூடான பாகில் மிட்டாய் உருண்டைகளை போட்டு இரண்டு மணி நேரம் ஊற வைத்து எடுத்தால் சுவையான தேன்மிட்டாய் தயார். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.