முகப்பு
மகளிர்மணி

முருங்கைக்கீரை தோசை

அரிசி, பருப்பு இரண்டையும் தண்ணீரில் ஊறவைத்து மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்க வேண்டும்.

Updated On : 10 மே 2026, 12:00 am IST
முருங்கைக்கீரை தோசை
பகிர்:

தேவையான பொருள்கள்:

முருங்கைக்கீரை- ஒரு கிண்ணம்

பச்சரிசி, புழுங்கல் அரிசி- தலா 200 கிராம்

Advertisement

துவரம் பருப்பு -100 கிராம்

கடலைப் பருப்பு, வெங்காயம் -தலா 50 கிராம்

வற்றல் மிளகாய்-10

பெருங்காயம் -ஒரு தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை:

அரிசி, பருப்பு இரண்டையும் தண்ணீரில் ஊறவைத்து மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்க வேண்டும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு முருங்கைக் கீரையையும் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் அதில் சிறிது எண்ணெய் தடவி, இந்த முருங்கைக்கீரை அரைத்த மாவை ஒரு கரண்டி எடுத்து, அதில் தோசையாக வட்டமாக ஊற்றி, மேலே ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, வெந்தவுடன் இரண்டு பக்கமும் சிவக்க வேக வைத்துவிட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.