முகப்பு
சிறுவர்மணி

பொன்மொழிகள்

கவலையுடன் வாழ்பவர்கள் இறப்பதற்கு அவசர அழைப்பு விடுக்கிறார்கள்

Updated On : 25 டிசம்பர் 2015, 6:07 pm IST
பகிர்:

கவலையுடன் வாழ்பவர்கள் இறப்பதற்கு அவசர அழைப்பு விடுக்கிறார்கள்

- யாரோ

கலக்கத்தைக் கடன் வாங்குபவர்கள் கொடுக்கும் வட்டி கவலை!

Advertisement

Advertisement

- ஜார்ஜ் வாஷிங்டன்

கவலையைக் கடன் வாங்குவது உன் இயல்பாக இருக்கலாம். ஆனால் அதை அடுத்தவனுக்குக் கடன் கொடுக்காதே.

- குட்ஹார்ட் கிப்ளிங்

வேலை கொல்வதைவிடக் கவலையே அதிகம் பேரைக் கொல்கிறது! காரணம் அதிகம் பேர்கள் வேலை செய்வதை விட கவலையே படுகிறார்கள்!

- பியர்ட் ஃப்ரண்ட்

நேற்றைய தவறுகளுக்கும், நாளை நடக்கப்போகும் இன்னல்களுக்கும் கவலைப்படுவது வீண் கால விரயம்!

- யாரோ

நீங்கள் நிமிர்ந்து நிற்கும்போது உங்கள் நிழல் குறுகி இருக்கிறது என்று கவலைப்படாதீர்கள்!

- சீனப்பழமொழி

கவலை வாழ்க்கையின் துரு! அது ஒளியை அழித்து விடுகிறது. ஆற்றலை வலுவிழக்கச் செய்து விடுகிறது. கடவுளிடம் நம்பிக்கை வைப்பதே அதைத் தடுத்துத் தீர்க்கும் ஒரே வழி.

- டிரையன் எட்வர்ட்ஸ்

இரண்டு நாட்களைப் பற்றி எவரும் கவலை கொள்ள வேண்டாம். அந்த இரண்டு நாட்கள் நேற்றும் நாளையும்!

- ராபர்ட் ரால்ஃப் இஞ்சே

கவலைப்படக்கூட நேரமில்லாமல் பகலில் சுறுசுறுப்பாகவும், கவலைப்படக்கூட நேரமில்லாமல் இரவில் நன்கு தூங்குபவர்களும் புனிதமானவர்கள்!

- யாரோ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments