முகப்பு
சிறுவர்மணி

பொன்மொழிகள்

கவலையுடன் வாழ்பவர்கள் இறப்பதற்கு அவசர அழைப்பு விடுக்கிறார்கள்

சிறுவர்மணி

பொன்மொழிகள்

கவலையுடன் வாழ்பவர்கள் இறப்பதற்கு அவசர அழைப்பு விடுக்கிறார்கள்

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:53 AM
பகிர்:

கவலையுடன் வாழ்பவர்கள் இறப்பதற்கு அவசர அழைப்பு விடுக்கிறார்கள்

- யாரோ

கலக்கத்தைக் கடன் வாங்குபவர்கள் கொடுக்கும் வட்டி கவலை!

- ஜார்ஜ் வாஷிங்டன்

கவலையைக் கடன் வாங்குவது உன் இயல்பாக இருக்கலாம். ஆனால் அதை அடுத்தவனுக்குக் கடன் கொடுக்காதே.

- குட்ஹார்ட் கிப்ளிங்

வேலை கொல்வதைவிடக் கவலையே அதிகம் பேரைக் கொல்கிறது! காரணம் அதிகம் பேர்கள் வேலை செய்வதை விட கவலையே படுகிறார்கள்!

- பியர்ட் ஃப்ரண்ட்

நேற்றைய தவறுகளுக்கும், நாளை நடக்கப்போகும் இன்னல்களுக்கும் கவலைப்படுவது வீண் கால விரயம்!

- யாரோ

நீங்கள் நிமிர்ந்து நிற்கும்போது உங்கள் நிழல் குறுகி இருக்கிறது என்று கவலைப்படாதீர்கள்!

- சீனப்பழமொழி

கவலை வாழ்க்கையின் துரு! அது ஒளியை அழித்து விடுகிறது. ஆற்றலை வலுவிழக்கச் செய்து விடுகிறது. கடவுளிடம் நம்பிக்கை வைப்பதே அதைத் தடுத்துத் தீர்க்கும் ஒரே வழி.

- டிரையன் எட்வர்ட்ஸ்

இரண்டு நாட்களைப் பற்றி எவரும் கவலை கொள்ள வேண்டாம். அந்த இரண்டு நாட்கள் நேற்றும் நாளையும்!

- ராபர்ட் ரால்ஃப் இஞ்சே

கவலைப்படக்கூட நேரமில்லாமல் பகலில் சுறுசுறுப்பாகவும், கவலைப்படக்கூட நேரமில்லாமல் இரவில் நன்கு தூங்குபவர்களும் புனிதமானவர்கள்!

- யாரோ

முழு கட்டுரையைப் படிக்க →