முகப்பு
சிறுவர்மணி

பொறுப்பு!

ஒரு கோயிலுக்குத் தலைவராகும் வாய்ப்பு பெரியாருக்கு ஏற்பட்டது. பெரியாரின் அப்பா வகித்த பதவி அது! சிலர் பயந்தனர்!

Updated On : 28 அக்டோபர் 2016, 3:56 pm IST
பகிர்:

ஒரு கோயிலுக்குத் தலைவராகும் வாய்ப்பு பெரியாருக்கு ஏற்பட்டது. பெரியாரின் அப்பா வகித்த பதவி அது! சிலர் பயந்தனர்! கடவுள் இல்லை என்ற கொள்கை உடையவர் பெரியார்! அவரிடம் கோவிலை நடத்தும் பொறுப்பை கொடுப்பது சரியா? கோவில் குட்டிச் சுவராகிவிடும் என்று வாய்க்கு வந்தபடி பேசினர். ஆனால் நடந்தது என்ன? பெரியார் கோவிலை சீர் செய்து நன்றாகப் பராமரித்தார். முதலில் கோவில் கடனில் இருந்தது. பெரியார் தலைமைப் பொறுப்பேற்ற பிறகு கோவிலுக்கு ரூ.45000 சேமிப்பு நிதி இருந்தது! முதலில் குறை கூறியோர் பிறகு பாராட்டினர்! ஏற்றுக்கொண்ட பொறுப்பைச் செவ்வனே செய்தார் பெரியார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.