சிறுவர்மணி

கடி

DIN

""இந்த இடத்துக்கு இவ்வளவு பறவைகள் வருதே!.... இதெல்லாம் எங்கே இருந்து சார் வருது?....''
""எல்லாமே "முட்டை' யிலேர்ந்துதான்!...''

பானுமதி, 95, தணிகாசலம் நகர், சென்னை - 600110.

""படவா!.... மரத்து மேலேயா ஏறினே?... 
போய் பெஞ்சு மேலே ஏறு!...''
""இது என்ன அதைவிடவா உயரம்?...'' 

அலிமா, கடையநல்லூர்



""அந்த அங்கிள் கோட்டை கட்டியிருக்காரு!....''
""எந்த ஊருலே''
""அதில்லே,....கோட்டும், டையும் கட்டியிருக்காருன்னேன்...''

கே.ஆர்.உதயகுமார், சென்னை.



""கடலும் கடலைச் சார்ந்த இடத்துக்கும் பெயர் என்ன?...''
""பீச் டீச்சர்!...''

எ.நாகராஜன், பம்மல்.


""காலையிலே என்னைப் பார்த்து 
"அடடே' ன்னு சொன்னியே.....
இப்ப ராத்திரியிலே என்ன சொல்வே?...
"" ...."அட, நைட்'....ன்னுதான்!...''

கே.ஆர்.உதயகுமார், சென்னை - 600001.



""தண்ணீருக்கும், பன்னீருக்கும் என்ன வித்தியாசம்?...''
""நீயே  சொல்லு...''
""தண்ணீரை "தண்ணி' ன்னு  சொல்லலாம்....
அதே பன்னீரை "பன்னி' ன்னு சொல்ல முடியுமா?...''

விஜயா, சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

SCROLL FOR NEXT