முகப்பு
சிறுவர்மணி

பொன்மொழிகள்

நேரத்தையும், பணத்தையும் திட்டமிட்டுச் செலவு செய்தால் உடம்பு ஓய்வுக்காக ஏங்காது.

Updated On : 29 அக்டோபர் 2019, 12:58 pm IST
பகிர்:

நேரத்தையும், பணத்தையும் திட்டமிட்டுச் செலவு செய்தால் உடம்பு ஓய்வுக்காக ஏங்காது.
 - யாரோ
 மன நிறைவே செல்வத்தை அழைக்கிறது ! ஆடம்பரமோ வறுமையைத் தேடுகிறது!
 - இந்தியப் பழமொழி.
 நன்றி கெட்டவனுக்கு நன்மை செய்வது கடலுக்குள் பன்னீர் தெளிப்பதைப் போன்றது!
 - யாரோ
 உழைக்கும் கரங்கள் வழிபடும் கரங்களைவிட வலிமை மிகுந்தவை!
 - சரகஸ்திரர்
 முயற்சி என்பது, வளர்ந்து தேயும் நிலவு அல்ல..... மேன்மேலும் வளர்வது!
 - பிளிங்டன்
 உயர்ந்த உள்ளங்களுக்கு இடையில்தான் தூய்மையான தோழமை மலர முடியும்!
 - கிங்ஸ்லி
 கடமையைச் செய்! புகழ் உன் காலடியில் கிடக்கும். செல்வாக்கு தானே தேடி வரும்!
 - கைலர்
 நம்பிக்கைதான் எதிர்காலத்தை உருவாக்கிக் கொணடிருக்கிறது!
 - எட்மண்ட் பர்க்
 ஒரு நல்ல நண்பனைப் பெறுவதற்கு ஒரே வழி நீயும் ஒரு நல்ல நண்பனாக இருப்பதுதான்!
 - எமர்சன்
 தொகுப்பு : சஜி பிரபு மாறச்சன்
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.