FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் மே 29 - நேரலை!

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இணைந்திருங்கள்.

பகிர்:

கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு

மாணவர் விசா மூலம் கனடா சென்றிருந்த 23 வயது இந்திய மாணவி வீடு ஒன்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சதத்தை தவறவிட்ட சூர்யவன்ஷி: குஜராத் அணிக்கு 215 ரன்கள் இலக்கு

குஜராத் அணிக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் சூர்யவன்ஷி அதிரடியால் ராஜஸ்தான் அணி 214 ரன்கள் குவித்தது.

இந்திய மாம்பழங்களுக்குத் தடை விதித்த ஜப்பான்!

இந்தியாவின் பதப்படுத்தும் ஆலைகளில் செயல்பாட்டுத் தரங்கள் மேம்படுத்தப்படும் வரையில், இந்திய மாம்பழங்களின் இறக்குமதிக்கு ஜப்பான் தடை

Advertisement

Advertisement

ஆட்சியர்கள், ஆணையர்கள் உள்பட மேலும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, தருமபுரி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் உள்பட பல்வேறு துறைகளின் செயலர்களும் ஆணையர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலி

பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலியாகினர் என்று முதல்வர் சாம்ராட் சௌதரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

விதிமீறல்களுடன் செயல்பட்ட 67 கல்குவாரிகள் தற்காலிகமாக மூடல்!

விதிமீறல்களுடன் செயல்பட்டுவந்த 67 கல்குவாரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரி: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்க தவறியவர்கள் ஜூன் 1 முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை: கேரள முதல்வர் விளக்கம்!

கேரளத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை நடத்திய சோதனை குறித்து அந்த மாநில முதல்வர் வி.டி. சதீசன், வெள்ளிக்கிழமை விளக்கம் அளித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு!

மேற்கு வங்கத்தில் ஊடுருவியதாக சந்தேகிக்கப்படும் 335 பேர், 11 தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

ஜூன் மாதம் வெய்யில் எப்படி இருக்கும்?

தமிழ்நாட்டில் ஜூன் மாதமும் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கள்ளச்சாராயம் குடித்து 15 பேர் பலி!

மகாராஷ்டிர மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

கனமழை எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களிலும், நாளை 14 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் தேரோட்டம்!

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.

கரப்பான்பூச்சி கட்சியின் எக்ஸ் பக்கம் மீதான தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் மீதான தடையை நீக்க, தற்போதைய நிலையில் மறுப்பதாக உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

அமைச்சர் ரமேஷிடம் லஞ்சம்! திருச்செந்தூர் கோயில் அர்ச்சகர், காவலாளிகள் பணியிடை நீக்கம்!

பட்டு வேட்டி சட்டையில் தலைமைச் செயலகம் வந்த முதல்வர் விஜய்!

பினராயி விஜயன்

வந்தே மாதரத்தின் முழு வடிவமும் பாட வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்ச்சி நிரல் என்று கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை விமர்சித்துள்ளார்.

விழுப்புரம்: குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை (மே 29) வெளிநடப்பு செய்துள்ளனர்.

பாரபட்சமின்றி நடவடிக்கை

திருச்செந்தூர் கோயிலில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை மேற்கொள்வோம் என்று தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

3 மாதங்களுக்குள் தீர்ப்பு

விசாரணை முடிந்த நாளிலிருந்து மூன்று மாதங்களுக்கு அனைத்து நீதிபதிகளும் தீர்ப்பை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வுக் கட்டணம் திருப்பி அளிப்பு: வங்கி விவரங்களைப் புதுப்பிக்க கூடுதல் அவகாசம்!

நீட் தீர்வுக் கட்டணம் திருப்பி அளிக்கப்பதற்கான நடைமுறையில் வங்கி விவரங்களைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை வரும் ஜூன் 22 ஆம் தேதி வரை நீட்டித்து, தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் வழக்கமாக பெய்யும் மழை அளவானது, இந்தாண்டு சராசரியாக 90 சதவிகிதமாக இருக்கக் கூடும்.

அமைச்சர் ரமேஷிடம் லஞ்சம்

திருச்செந்தூர் கோயிலுக்கு ஆய்வு செய்யச் சென்ற தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷை சிறப்பு தரிசனத்துக்கு அழைத்துச் செல்ல ரூ. 4,000 லஞ்சமாக அர்ச்சகர்கள் வாங்கியுள்ளனர்.

4 துணை முதல்வர்கள்?

கர்நாடகத்தில் டிகே சிவக்குமார் தலைமையில், புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் 4 பேருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிடிவி தினகரன் கண்டனம்

பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் தவெக ஆட்சி நிர்வாகத்தின் கையாலாகத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 800 உயர்ந்துள்ளது.

சித்தராமையா ராஜிநாமா ஏற்பு

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டு, அமைச்சரவையைக் கலைத்து ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.

பாலம் இடிந்து விபத்து

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்றிரவு வீசிய பலத்த காற்றின் காரணமாக கட்டுமானத்தில் இருந்த பாலம் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.

அரசு இல்லத்தை காலி செய்தார் இபிஎஸ்

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி, சென்னை பசுமை வழிச்சாலையில் வசித்து வந்த அரசு இல்லத்தை காலி செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments