முகப்பு
இந்தியா

கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு

மாணவர் விசா மூலம் கனடா சென்றிருந்த 23 வயது இந்திய மாணவி வீடு ஒன்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

கோப்புப்படம்.
பகிர்:

மாணவர் விசா மூலம் கனடா சென்றிருந்த 23 வயது இந்திய மாணவி வீடு ஒன்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சிடிவி நியூஸ் செய்தியின்படி, கடந்த மே 15ஆம் தேதி நயாகரா பகுதியில் உள்ள லேக்ஷோர் சாலை மற்றும் லேக் தெரு பகுதிக்கு அருகில், இரண்டு பேர் உயிரற்ற நிலையில் இருப்பதாக வந்த தகவலின் பேரில் அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்தனர். அப்போது அங்கு ஒரு வீட்டிற்குள் 23 வயது விதி மேகா இறந்து கிடப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

எனினும், அவரது மரணத்திற்கான காரணத்தை போலீஸார் இன்னும் வெளியிடவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக செயின்ட் கேத்தரின்ஸைச் சேர்ந்த ஜோஷுவா செயின்ட் ஓமர்(40) மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதை புலனாய்வாளர்கள் உறுதிப்படுத்தியதாக சிடிவி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

நயாகரா பகுதியில் இந்திய மாணவி விதி மேகா உயிரிழந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளதாக டொராண்டோவில் உள்ள இந்திய தூதரகம் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளது. மேலும், மாணவியின் உடலை இந்தியாவிற்கு கொண்டு செல்வது உள்ளிட்ட அனைத்து ஆதரவையும் உதவிகளையும் குடும்பத்தினருக்கு வழங்கி வருகிறது என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

summary

A 23-year-old woman from India, who came to Canada on a student visa, was found dead earlier this month inside a home in Niagara Region.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.