விடுதலை நாள் விழா!
முந்நூறு ஆண்டு காலம் மூழ்கினோம் அடிமை இருளில்எந்நாளில் விடியல் என்றே
முந்நூறு ஆண்டு காலம்
மூழ்கினோம் அடிமை இருளில்
எந்நாளில் விடியல் என்றே
ஏங்கியே கிடந்த வேளை
உத்தமர் காந்தி வந்தார்
உண்மையைக் கையில் கொண்டார்
நித்தமும் தேசம் எங்கும்
நீண்டதோர் பயணம் செய்தார்!
ஒற்றுமை, துணிவு என்னும்
உணர்வினைத் தூண்டி, தேசப்
பற்றினை நல்லோர் ஊட்ட
பாமரர் எழுச்சி பெற்றார்!
அறவழிப் போராட்டங்கள்
அனைத்திலும் வெற்றி கண்டோம்!
பிறகுதான் நமது வலிமை
ஆள்பவர் புரிந்து கொண்டார்!
ஓயுதல் இல்லா உழைப்பு
உண்மையாம் அஹிம்சை முன்னர்
ஆயுதம் தோற்றுப் போகும் !
அதிசயம் நடக்கக் கண்டோம்!
தியாகம், நல் தூய்மை, வளமை
தெரிவிக்கும் வண்ணக் கொடியை
உயரத்தில் ஏற்றிப் போற்றி
உற்சாகம், இன்பம் கொள்வோம்!
உரிமையைப் பெற்ற நாமும்
உலகிலே உயர்ந்தோர் என்றே
பெருமையாய்ப் பேசும் வண்ணம்
பிறர் நலம் மதித்து வாழ்வோம்!