நவராத்திரி!
ஒவ்வொரு நாளும் மக்களுக்குஉலகில் ஆயிரம் பொருள்தேவை.அவ்விதப் பொருட்கள் அனைத்தையுமே
ஒவ்வொரு நாளும் மக்களுக்கு
உலகில் ஆயிரம் பொருள்தேவை.
அவ்விதப் பொருட்கள் அனைத்தையுமே
ஆக்கித் தருவன பலதொழில்கள்!
உண்ணும் உணவை விளைவிக்கும்
உழவரின் திருநாள் அமைந்ததுபோல்
மண்ணில் மற்ற தொழில்களையும்
மதிக்கும் நாட்கள் பலஉண்டு!.
பொருளை ஆக்கும் கருவிகளை
புனிதப் படுத்தி, அலங்கரித்து
அருமை உழைப்பைப் போற்றுகின்ற
"ஆயுத பூஜை' ஒருநாளாம்!
Advertisement
Advertisement
கல்வி, செல்வம், வீரமெலாம்
இனிதாய் எவர்க்கும் வாய்த்திடவே
சக்தி. திருமகள், வாணிக்கு
ஒன்பது நாட்கள் பூஜையுண்டு!
கண்டு களிக்க கொலுவைத்து
கனிவாய் பெண்களை உபசரித்து
சுண்டல், அவல்,பொரி, பொங்கலிட்டு
சுவைத்திடுவார் நவ ராத்திரியில்!!
பத்தாம் நாள் விஜயதசமி! - அன்று
துவங்கிய காரியம் வெற்றிபெறும்!!
முப்பெரும் தேவியர் அருள் கிடைக்க - முழு
மனதுடன் துதித்து அருள் பெறுவோம்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.