முகப்பு
சிறுவர்மணி

கப்பலோட்டிய தமிழன்

"உலகநாதர்' ..., "பரமாயி'...., தம் மகனாய் - வ.உ.சி."ஓட்டப்பிடாரம்' எனும் ஊரில் பிறந்தார்பல கற்றார் ; வழக்கறிஞர் பணியால் - ஊரில் 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
பகிர்:

"உலகநாதர்' ..., "பரமாயி'...., தம் மகனாய் - வ.உ.சி.
"ஓட்டப்பிடாரம்' எனும் ஊரில் பிறந்தார்
பல கற்றார் ; வழக்கறிஞர் பணியால் - ஊரில் 
பாமரர்க்கும் உதவி பல புரிந்தார்.

ஆங்கிலேயர் விற்க வந்த பொருளை - இங்கே 
அவர் துணிவாய்ப் புறக்கணிப்பு செய்தார்.
வங்கத்தில் "சுதேசிக் கப்பல்' ஓட்டி - நல்ல 
வணிகத்தால் பெரும் புரட்சி கண்டார்.

மக்களெல்லாம் வருத்தமுற அவரை - கோவை
மத்தியச் சிறைச் சாலையிலே அடைக்க....,
செக்கிழுத்தார் ; கல்லுடைத்தார் அங்கே - தியாகச் 
செம்மலெனப் புகழ்பெற்றார் அதனால்.

சிறைக்குள்ளே துன்புற்ற போதும் - சிறந்த 
சிந்தனையால் எழுதினார் பல நூல்கள்! - அவை 
தமிழ்மறை திருக்குறளுக்குரையும் - நம் 
மன இருளைப் போக்கும் நூல் பலவும்! 

திருநாட்டில் சுதந்திரமாய் நாமும் - வாழத் 
தியாகங்கள் செய்தவர்கள் பலருள் 
சிறந்தவராம் சிதம்பரனார்! அவர்தம் 
சேவையினைப் போற்றிடுவோம் வாரீர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.