சிறுவர்மணி

கடி

DIN

""டேய், எ, பி. சி, டி, தலைகீழா சொல்லச் சொன்னேன்..... அதுக்குன்னு இப்படியா?''

கே. இந்துகுமரப்பன்,
விழுப்புரம்.

""வா சாப்பிடப் போலாம்!....''
""இடம் இல்லே!''
""பந்தியிலா இடமில்லே?''
""இல்லே என் தொந்தியிலே!''

வி . ரேவதி,
தஞ்சாவூர்.

""வரிசையிலே கடைசியிலே போய்  நிக்கச் சொன்னேனே.... ஏன் போகலே?''
""ஏற்கனெவே யாரோ ஒரு பையன் அங்கே நின்னுக்கிட்டிருக்கானே சார்!''

உமர்
கடையநல்லூர் - 627751.

""என்ன மாலா மவுனமா இருக்கே?''
""இல்லையே, மெளன ராகம்  பாடிக்கிட்டிருந்தேன்!''

பி.சி.ரகு,
விழுப்புரம்.

""சூரியனைச் சுற்றும் கோள்கள் பெயரைச் சொல்லு பார்க்கலாம்னு கேட்டா பேசாம இருக்கியே?.... என்ன ஆச்சு உனக்கு?''
""கோள் சொல்லக்கூடாதுன்னு சொன்னீங்களே சார்!''

அ . ப . ஜெயபால், 
சிதம்பரம் - 608001.


 ""சாயங்காலம் மொட்டை மாடியிலேயிருந்து வர்றப்ப அம்மா மூணு வாயில் புடவை வெச்சிருந்தாங்க!''
""கர்சீப்னா பரவாயில்லே..... நம்பலாம்!.....  மூணு புடவையை வாயில் வெச்சிருந்தாங்களா?.... நம்பவே முடியலையே!''

மாலாராம், 
அஞ்சல், வடகுத்து - 607308.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT