காந்தள் பூக்கள்
காந்தள் பூ - தமிழக அரசு அங்கீகரித்த மாநில மலராகும். மனிதன் முதலில் தோன்றியதாக சொல்லப்படும் ஆப்பிரிக்க ஆசியப் பகுதியை தாயகமாகக் கொண்டதாகும்.
காந்தள் பூ - தமிழக அரசு அங்கீகரித்த மாநில மலராகும். மனிதன் முதலில் தோன்றியதாக சொல்லப்படும் ஆப்பிரிக்க ஆசியப் பகுதியை தாயகமாகக் கொண்டதாகும். பூக்களில் தனித்துவமானது காந்தள் பூக்கள். இது கார்த்திகை மாதத்தில் மழை பொழிந்ததும் வேலிகளில் வரிசையாக பூத்திருப்பது, கார்த்திகை தீபங்கள் ஏற்றியது போல ஜொலிக்கும். காந்தள் பூக்கள் பூக்கும் போது இளம் பச்சை நிறமாகவும், பின்னர் மஞ்சளாகவும், கிச்சிலி நிறமாகவும், இறுதியில் சிவப்பாகி கருஞ் சிவப்பு நிறமாக நிறைந்து ஒளிரும்.
மேலும் இதழ்களின் அடிப்பகுதி ஒரு நிறமாகவும், நடுப்பகுதி வேறு நிறமாகவும், நுனிப்பகுதி மற்றொரு நிறத்திலும் இருக்கும். மலேசியாவில் இம்மலர்களை சீனர்களின் பல வண்ண விளக்குகள் போலிருப்பதாக சொல்வர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.