தமிழ்மணி

பூவிழும் ஓசையிலும் பொலிந்தது காதல்

DIN

அவன் இரவிலே வர ஆசைப்பட்டான். தோழிக்கும் உடன்பாடுதான். ஆயினும், இரவிலே உறங்கிவிட்டால் என் செய்வது? இதிலும் ஓர் உளவியல் என்னவென்றால், "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது' என்பதுதான் அது.
 "கொன்ஊர் துஞ்சினும் யாம்சுஞ் சலமே
 எம்இல் அயலது ஏழில் உம்பர்
 மயிலடி இலைய மாக்குரல் நொச்சி
 அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த
 மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே' (138)
 தலைவ! எம் ஊர்க்குப் பக்கத்தே ஏழில் குன்றம் உளது. அதன் மேலே நொச்சி மரங்கள் உள்ளன. அவற்றின் இலைகள் மயிலின் காலடி போல, கவர்த்தனவாய் இருக்கும். அதில் கரிய பூங்கொத்துகள் உள. அழகுமிகும் மெல்லிய கிளைகளில், நன்கு முதிர்ந்த நீலமணி போலும் பூக்கள் கீழே உதிர்ந்துவிழும் ஓசை, நள்ளிரவில் எங்கட்கு நன்கு கேட்கும். அதனால், பெரியே ஊரே ஆழ்ந்து உறங்கினும் நாங்கள் உறங்க மாட்டோம்!
 (தமிழண்ணலின் "உள்ளங்கள் ஒன்றிடும்
 அன்றில் பறவைகள்' நூலிலிருந்து...)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT