உருகு பலகைக் காட்சி
திருச்செந்தூரில் பெருவிழாவின் போது ஏழாம் திருநாளில் விடியற்காலம் ஆறுமுக நயினார் அமர்ந்திருக்கும் பீடத்திலிருந்து எழுந்தருளல் செய்வதற்கு நல்ல நேரம் குறிக்கப்பெற்றிருக்கும்.
திருச்செந்தூரில் பெருவிழாவின் போது ஏழாம் திருநாளில் விடியற்காலம் ஆறுமுக நயினார் அமர்ந்திருக்கும் பீடத்திலிருந்து எழுந்தருளல் செய்வதற்கு நல்ல நேரம் குறிக்கப்பெற்றிருக்கும்.
பிள்ளையன் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய முறைகளோடு, ஆறுமுக நயினார் முன்னிலையில் ஆராதனைகள் செய்யப்படும். குறிப்பிட்ட நல்லோரையில், மூலவர் சந்நிதிக்கு எதிரில் அமைக்கப்பெற்றிருக்கும் தாழ்ந்த பீடத்திற்கு உயர்ந்த பீடத்தில் அமர்ந்திருக்கும் ஆறுமுக நயினாரை இறக்கமாக இவ்விரு பீடங்களுடனும் இணைக்கப்பட்டுள்ள பலகையின் வழியாக, சிறிது சிறிதாக அசைத்து நகர்த்திக்கொண்டு வந்து சேர்த்து, மூலஸ்தான சுப்பிரமணிய சந்நிதியைப் பார்க்க வைத்து, ஆராதனை செய்து புறப்பாடு செய்வார்கள். இதனை "உருகு பலகைக் காட்சி' என்பார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.