பலன் தரும் பரிகாரத் தலங்கள்
சென்னை காளிகாம்பாள் கோயில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி வந்து அம்மன் அருள் பெற்று சென்றதாக வரலாறு உள்ளது.
சென்னை காளிகாம்பாள் கோயில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி வந்து அம்மன் அருள் பெற்று சென்றதாக வரலாறு உள்ளது. நியாயமான வழக்குகளில் வெற்றியடைய இந்த கோயிலுக்கு வந்து சிறப்புப் பூஜைகள் செய்து பலனடைகிறார்கள். சென்னை பாரிமுனை தம்புச்செட்டி தெருவில் இக்கோயில்
அமைந்துள்ளது.
தஞ்சை பெரிய கோயிலில் வராகி அம்மன் சந்நிதி உள்ளது. இந்த அம்மனை வழிபட்டால் நியாயமாக வந்து சேர வேண்டிய பணம் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவனையும் பெருமாளையும் ஒரே இடத்தில் நின்று மூலவரை வழிபட முடியும். இடது கண்ணால் பெருமாளையும் வலது கண்ணால் சிவனையும் வழிபடும் வகையில் சந்நிதிகள் அமைக்கப்பட்டிருப்பது அபூர்வம்.
Advertisement
Advertisement
திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோயிலில் கமலாம்பிகை சந்நிதி உள்ளது. இந்த அம்மனை வழிபட்டால் கடன் தொல்லைகள், நோய் நொடிகள் நீங்கும் என்பது ஐதீகம்.
தர்மபுரி அருகே உள்ள மல்லிகார்ஜுனேஸ்வரர் காமாட்சி அம்மன், பைரவர் சந்நிதிகள் உள்ளன. கடன் பிரச்னை உள்ளவர்கள் இங்குள்ள பைரவர் சந்நிதியில் அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.