வெள்ளிமணி

பலன் தரும் பரிகாரத் தலங்கள்

சென்னை காளிகாம்பாள் கோயில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி வந்து அம்மன் அருள் பெற்று சென்றதாக வரலாறு உள்ளது.

ஆர்.விஜயலட்சுமி

சென்னை காளிகாம்பாள் கோயில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி வந்து அம்மன் அருள் பெற்று சென்றதாக வரலாறு உள்ளது. நியாயமான வழக்குகளில் வெற்றியடைய இந்த கோயிலுக்கு வந்து சிறப்புப் பூஜைகள் செய்து பலனடைகிறார்கள். சென்னை பாரிமுனை தம்புச்செட்டி தெருவில் இக்கோயில் 
அமைந்துள்ளது.

தஞ்சை பெரிய கோயிலில் வராகி அம்மன் சந்நிதி உள்ளது. இந்த அம்மனை வழிபட்டால் நியாயமாக வந்து சேர வேண்டிய பணம் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவனையும் பெருமாளையும் ஒரே இடத்தில் நின்று மூலவரை வழிபட முடியும். இடது கண்ணால் பெருமாளையும் வலது கண்ணால் சிவனையும் வழிபடும் வகையில் சந்நிதிகள் அமைக்கப்பட்டிருப்பது அபூர்வம்.

திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோயிலில் கமலாம்பிகை சந்நிதி உள்ளது. இந்த அம்மனை வழிபட்டால் கடன் தொல்லைகள், நோய் நொடிகள் நீங்கும் என்பது ஐதீகம்.

தர்மபுரி அருகே உள்ள மல்லிகார்ஜுனேஸ்வரர் காமாட்சி அம்மன், பைரவர் சந்நிதிகள் உள்ளன. கடன் பிரச்னை உள்ளவர்கள் இங்குள்ள பைரவர் சந்நிதியில் அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவளின் அழுகை ஒரு புயலைப் பற்றவைக்கும்: தனது புதிய படம் குறித்து நிவின் பாலி!

அலெக்ஸ் ஹேல்ஸின் சாதனையை சமன்செய்த ஜோ ரூட்!

நிலையற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி! மாற்றமின்றி நிறைவடைந்த பங்குச் சந்தை!

கவலைகளைப் போக்கும் மாரியம்மன்

திருஇடையாறு மருந்தீசர் !

SCROLL FOR NEXT