முகப்பு
உலகம்

அமெரிக்காவுக்கான முன்னாள் தூதருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

அடுத்த 3 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால் அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் ஹுசைன்

Updated On : 12 மார்ச் 2013, 3:13 am IST
பகிர்:

அடுத்த 3 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால் அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் ஹுசைன் ஹக்கானியின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும் என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக, பாதுகாப்பு காரணங்களுக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஹக்கானியின் சார்பில் அவரது வழக்குரைஞர் அஸ்மா ஜஹாங்கீர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இஃப்திகார் செüத்ரி தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஹக்கானியின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது.

கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை அமெரிக்க படைகள் சுட்டுக் கொன்றன. அப்போது, அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக இருந்த ஹக்கானி, அமெரிக்க ராணுவ முன்னாள் தளபதி மைக் முல்லனுக்கு ஒரு ரகசிய குறிப்பு அனுப்பி இருந்தார். அதில், பாகிஸ்தானில் ராணுவம் மீண்டும் அரசைக் கைப்பற்ற திட்டமிட்டிருப்பதால், அமெரிக்கா இதுவிஷயத்தில் தலையிட வேண்டும் என கோரியிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், ஹக்கானி அமெரிக்காவிலேயே வசித்து வருகிறார். நாடு திரும்பினால் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என ஹக்கானி கூறி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.