முகப்பு
உலகம்

பிரேசிலில் மக்கள் போராட்டம் தீவிரம்

பிரேசிலில் பஸ் மற்றும் மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு நகரங்களில் நடைபெறும் இப்போராட்டத்தில் லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 22 ஜூன், 2013 at 1:13 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:13 PM

பிரேசிலில் பஸ் மற்றும் மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு நகரங்களில் நடைபெறும் இப்போராட்டத்தில் லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பிரேசிலில் 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. இதற்காக அதிக நிதி செலவிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பஸ் மற்றும் மெட்ரோ ரயில் கட்டணத்தை அந்நாட்டு அரசு சமீபத்தில் உயர்த்தியது. இது மக்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது.

இதைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்தப் போராட்டம் பல்வேறு நகரங்களுக்குப் பரவியது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.