பிரேசிலில் மக்கள் போராட்டம் தீவிரம்
பிரேசிலில் பஸ் மற்றும் மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு நகரங்களில் நடைபெறும் இப்போராட்டத்தில் லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பிரேசிலில் பஸ் மற்றும் மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு நகரங்களில் நடைபெறும் இப்போராட்டத்தில் லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பிரேசிலில் 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. இதற்காக அதிக நிதி செலவிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பஸ் மற்றும் மெட்ரோ ரயில் கட்டணத்தை அந்நாட்டு அரசு சமீபத்தில் உயர்த்தியது. இது மக்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது.
இதைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்தப் போராட்டம் பல்வேறு நகரங்களுக்குப் பரவியது.
Advertisement