உலகம்

மெக்சிகோவில் ஆயுதம் தாங்கிய குழு சென்ற வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு: 15 பேர் பலி  

DIN

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் ஆயுதம் தாங்கிய குழு சென்ற வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத கும்பல் தாக்குதல் நடத்தியதால், 15 பேர் பலியாகியுள்ளனர்.

தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில்  போதைபொருள் கடத்தல் மிகமுக்கிய தொழிலாக உள்ளது. இதில் ஈடுபடும் குழாக்களின் இடையே மோதல் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருவதும் வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் அந்நாட்டின் கியூரரோ மாகாணத்தில் உள்ள ஐகுலா என்ற பகுதியில் ஆயுதம் ஏந்திய குழு ஒன்று வாகனத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது அவர்களைக் குறிவைத்து  மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த கோரத் தாக்குதலில் ஆயுதம் ஏந்திய குழுவினர் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாக்குதலை நடத்தியவர்கள் தப்பிச்சென்று விட்டனர். அவர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT