உலகம்

பிலிபைன்ஸில் கடும் நிலநடுக்கம்: சிறுவன் சாவு, கட்டடங்கள் சரிவு

DIN

பிலிபைன்ஸின் தெற்குப் பகுதியில் செவ்வாய்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.6-ஆகப் பதிவானது. இதில் பள்ளிச்சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். 

சுமார் ஒரு நிமிடத்துக்கும் மேலாக நீடித்த இந்த கடுமையான நிலடுக்கத்தில் பெரும்பாலான கட்டடங்களில் சேதம் ஏற்பட்டது. வணிக, பள்ளிகள் மற்றும் அலுவலகக் கட்டடங்கள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பள்ளிக்கட்டடம் ஒன்று சரிந்த விபத்தில் சிக்கி தப்பி வெளியேற முயற்சித்த சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். 

மேலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முன்னதாக இதே பகுதியில் ஏற்பட்ட நிலடுக்கத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். பல நூறு பேர் பாதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT