உலகம்

கொவைட்-19 தடுப்பில் சீனாவின் அனுபவம் உதவும்:உலகச் சுகாதார அமைப்பு

DIN

கொவைட்-19 நோய், நவ சீனா நிறுவப்பட்ட பிறகு, மிக விரைவாகவும் மிக அதிகளவிலும் பரவி, கட்டுப்படுத்துவதில் சிக்கல் நிலவும் ஒரு தொற்று நோயாகும். இந்த நோய் பாதிப்பு, ஒரு முக்கிய அவசர பொதுச் சுகாதாரச் சம்பவமாக விளங்குகிறது. 

புதிய புள்ளிவிவரங்களின்படி, 24ஆம் நாள் ஹூ பெய் மாநிலத்தைத் தவிர, சீனாவின் இதர பகுதிகளில் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 10-க்குள் குறைவே. தற்போது, சீனாவின் பல பகுதிகள், அவசர பொதுச் சுகாதாரச் சம்பவத்துக்கான எச்சரிக்கை நிலையை முதலாம் நிலையிலிருந்து தாழ்ந்த நிலைக்கு மாற்றியுள்ளன.

உலகச் சுகாதார அமைப்பு தலைமை இயக்குநரின் உயர் நிலை ஆலோசகர் எட்வோட் கூறுகையில், கொவைட்-19 பாதிப்பைச் சமாளிக்கும் வகையில், உலகத்துக்குச் சீனாவின் அனுபவம் தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

விடா நம்பிக்கையுடன் ஒற்றுமையாக நாம் ஒத்துழைத்தால், உலகம் இந்நெருக்கடியைக் கடந்து செல்ல முடியும் என்பது திண்ணம். 

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT