உலகம்

ஏமனில் ராணுவ முகாம் மீது ஏவுகணை தாக்குதல்: 24 வீரர்கள் பலி

DIN

ஏமனில் ராணுவ பயிற்சி முகாம் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் உயிரிழந்தனர். 

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வடமேற்கில் மரிப் மாகாணத்தின் அல்-மிலா பகுதியில் ராணுவ பயிற்சி முகாமை குறிவைத்து நேற்று ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் 24 வீரர்கள் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். 

எனினும், இந்த தாக்குதலுக்கு ஹவுத்திகள் பொறுப்பேற்கவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT