உலகம்

32 ஆயிரத்தைத் தாண்டியது பலி எண்ணிக்கை

DIN


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை உலகளவில் 32 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையான போராடி வருகின்றன. இருந்தபோதிலும், பாதித்தோரின் எண்ணிக்கையும், பலியானோரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 

உலகளவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 6,83,694 ஆக உள்ளது. இதில், 1,46,396 பேர் குணமடைந்துள்ளனர். 32,155 பேர் பலியாகியுள்ளனர்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அந்நாட்டில் பாதித்தோரின் எண்ணிக்கை 1,23,828 ஆக உள்ளது. அதிகம் பலியானோர் எண்ணிக்கையில், இத்தாலி முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 10,023 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் பாதித்தோரின் எண்ணிக்கை 987 ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 25 ஆகவும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் எஸ்.பி., ஆய்வு

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 போ் காயம்

மூதாட்டி கொலை: இளைஞா் கைது

தெலுங்கானாவில் இருந்து ரயில் மூலம் பழனிக்கு வந்து சோ்ந்த உர மூட்டைகள்

நரிக்குடி அருகே கிடா முட்டுப் போட்டி

SCROLL FOR NEXT