உலகம்

மெக்சிகோவில் ஒரு லட்சத்தைத் தாண்டியது கரோனா பலி

DIN

மெக்சிகோவில் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.

உலகளவில் கரோனா தொற்றால் இதுவரை 5.72 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,97,34,003 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தநிலையில் 13,65,688 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் மெக்சிகோவில் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மெக்சிகோவில் 576 பேர் கரோனாவால் பலியாகியுள்ளது. 

இதனால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 100,104 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் தொற்றால் 4,472 பேர் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,019,543ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஹியூகோ லோபஸ் கூறுகையில், தற்போதைய நிலவரப்படி கரோனா பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது. 

இவ்வளவு விரைவாக பரவிய ஒரு நோயை நாங்கள் ஒருபோதும் சந்தித்ததில்லை என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT