முகப்பு
உலகம்

பிரான்ஸில் கரோனா பலி 50 ஆயிரத்தைக் கடந்தது!

பிரான்ஸில் கரோனா பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்து பதிவாகியுள்ளது. 

Updated On : 25 நவம்பர், 2020 at 12:47 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:27 PM

பிரான்ஸில் கரோனா பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. இதையடுத்து பிரான்ஸிலும் கரோனா பாதிப்பு மற்றும் பலி சமீபமாக அதிகரித்து வருகிறது.

பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 458 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 50,237 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் புதிதாக 9,155 பேர் உள்பட இதுவரை 21,53,815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 1,54,679 பேர் குணமடைந்துள்ளனர். 

பிரான்ஸில் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதியிலிருந்து கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் நவம்பர் 28 ஆம் தேதி வரை அந்த நாட்டில் மூன்று கட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.