அமெரிக்கா: தினசரி பலி புதிய உச்சம்
அமெரிக்காவில் தினசரி கரோனா பலி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
அமெரிக்காவில் தினசரி கரோனா பலி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 3,998 போ் கரோனாவுக்கு பலியாகினா். இது, நாட்டின் அதிகபட்ச தினசரி கரோனா பலி எண்ணிக்கையாகும். இதுதவிர, கூடுதலாக 2,65,246 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அந்தப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி அமெரிக்காவில் 3,74,197 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.
Advertisement