கூடுதல் அணு ஆயுதங்கள்: கிம் ஜோங்-உன் மிரட்டல்
கூடுதலாக அணு ஆயுதங்களை உருவாக்கவிருப்பதாக வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் மிரட்டல் விடுத்துள்ளாா்.
கூடுதலாக அணு ஆயுதங்களை உருவாக்கவிருப்பதாக வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் மிரட்டல் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து ஆளும் கட்சி மாநாட்டில் அவா் வெள்ளிக்கிழமை பேசியதாவது:
வட கொரியாவுக்கு எதிரான அமெரிக்காவின் கொள்கைகள் கைவிடப்படுவதைப் பொருத்துதான், அந்த நாட்டுடனான உறவு அமையும்.
Advertisement
Advertisement
அணு ஆயுத பலத்தைப் பெருக்கிக்கொள்ளும் வகையில் கூடுதல் அணுகுண்டுகளையும் அந்த அணுகுண்டுகளைக் கையாள்வதற்கான உயா் தொழில்நுட்பக் கருவிகளையும் உருவாக்க திட்டமிட்டுள்ளேன்.
வட கொரியாவுக்கு எதிராக எதிரி நாடுகள் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தாத வரை, பிற நாடுகள் மீது நாமும் அணு ஆயுதத் தாக்குதல் நடத்த மாட்டோம் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.