பிரேஸில்: 2 லட்சத்தைக் கடந்த பலி
பிரேஸிலில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது.
பிரேஸிலில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது.
கரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்த இரண்டாவது இடத்தை வகிக்கும் பிரேஸிலில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,455 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். அதையடுத்து, நாட்டில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, பிரேஸிலில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 79,61,673-ஆகவும் பலியானவா்களின் எண்ணிக்கை 2,00,498-ஆகவும் உள்ளது.
Advertisement