முகப்பு
உலகம்

அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை: 70,000 சுட்டுரைக் கணக்குகள் நீக்கம்

அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை சம்பவம் தொடர்பாக 70 ஆயிரம் சுட்டுரைக் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Updated On : 12 ஜனவரி 2021, 4:07 pm IST
அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை: 70,000 சுட்டுரைக் கணக்குகள் நீக்கம்
பகிர்:

அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை சம்பவம் தொடர்பாக 70 ஆயிரம் சுட்டுரைக் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் புதன்கிழமை நடைபெற்று வந்தது. 

அப்போது அமெரிக்க அதிபரின் தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை முறியடிக்கும் முயற்சியாக, கடந்த புதன்கிழமை காலை டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 4 பேர் பலியாகினர். 

Advertisement

Advertisement

அதனைத் தொடர்ந்து வன்முறையைத் தூண்டுதல் மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்து தவறான தகவலை தொடர்ச்சியாகப் பரப்பியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள கணக்குகள்  தற்காலிகமாக முடக்கப்பட்டன.  சுட்டுரை நிறுவனம் அமெரிக்க அதிபரின் தனிக்கணக்கை நிரந்தரமாக நீக்கியது.

அதனைத் தொடர்ந்து வன்முறையை தூண்டும் விதமாக சுட்டுரையில் பதிவிட்ட கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை 70 ஆயிரம் சுட்டுரைக் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments