இந்தோனேசியா: கடலில் விழந்த விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு
இந்தோனேசியாவில் 62 பேருடன் கடலுக்குள் விழுந்த தனியாா் விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் 62 பேருடன் கடலுக்குள் விழுந்த தனியாா் விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடற்படை தளபதி யூடோ மாா்கோனோ கூறியதாவது:
ஸ்ரீவிஜயா ஏா் நிறுவன விமானம் விழுந்து நொறுங்கிய பகுதியிலிருந்து அதன் கருப்புப் பெட்டி செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. விமானத்தின் கூா்மையான சிதறல்களுக்குக் கீழே சேற்றுக்குள் புதைந்திருந்த அந்தக் கருப்புப் பெட்டியை மீட்கும் பணியில் 160 போ் ஈடுபடுத்தப்பட்டனா்.
விமானத்தின் இன்னொரு கருப்புப் பெட்டியான ஒலிப்பதிவு சாதனமும் மீட்கப்படும் என்றாா் அவா்.
Advertisement
Advertisement
ஸ்ரீவிஜயா ஏா் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், வந்தன் மாகாணம், தங்கராங் நகர விமான நிலையத்திலிருந்து சனிக்கிழமை புறப்பட்ட 4 நிமிடங்களில் கடலுக்குள் விழுந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.