முகப்பு
உலகம்

போர்த்துகலில் பொதுமுடக்கம் அறிவிப்பு

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு தழுவிய பொதுமுடக்கம் போர்த்துகலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 14 ஜனவரி 2021, 1:40 pm IST
போர்த்துகீசிய பிரதமர் அன்டோனியோ கோஸ்டா
பகிர்:

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு தழுவிய பொதுமுடக்கம் போர்த்துகலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளும் பொதுமுடக்கம் அறிவித்து தற்போது படிப்படியாக மீண்டு வருகின்றன.

இந்நிலையில் போர்த்துகல் நாட்டில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை போர்த்துகீசிய பிரதமர் அன்டோனியோ கோஸ்டா வியாழக்கிழமை வெளியிட்டார்.

Advertisement

Advertisement

15 நாள்கள் விதிக்கப்பட்டுள்ள இந்தப் பொதுமுடக்கத்தையொட்டி அத்தியாவசிய பணிகள் தவிர மற்றவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது போர்சுக்கல் நாட்டின் 9ஆவது பொதுமுடக்க அறிவிப்பாகும்.

போர்த்துகலில் கடந்த 24 மணி நேரத்தில் 10,556 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை 8,326 பேர் தொற்று பாதிப்பால் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments