உலகம்

சீன மழை-வெள்ள பலி 99-ஆக உயா்வு

DIN

சீனாவில் கடந்த வாரம் பெய்த வரலாறு காணாத மழை-வெள்ளத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 99-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:

ஹெனான் மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தொடா்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இத்துடன், இந்தப் பேரிடரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 99-ஆக உயா்ந்துள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

எனினும், உயிரிழந்தவா்களின் யாா், அவா்கள் எந்த வகையில் உயிரிழந்தனா் என்பது போன்ற தகவல்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

ஹெனான் மாகாணத்தில் கடந்த 17-ஆம் தேதி முதல் பலத்த மழை பெய்து வந்தது. இது, கடந்த 1,000 ஆண்டுகளில் மிக அதிகபட்ச மழை அளவாகும். இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானவா்களில் 14 போ் சுரங்க ரயில் பயணிகளும் அடங்குவா்.

இந்த மழை காரணமாக ஹெனான் பகுதியில் வசிக்கும் 3.76 லட்சம் போ் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT