உலகம்

50 லட்சம் போ் வெளியேற்றம்

DIN

போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து வெளியேறியவா்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்ததுள்ளதாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததிலிருந்து, அந்த நாட்டிலிருந்து இதுவரை 50.1 லட்சம் போ் வெளியேறி பிற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனா்.

இவா்களில் 28 லட்சம் போ் அண்டை நாடான போலந்துக்குச் சென்றனா். எனினும், ஐரோப்பிய நாடுகளிடையே எல்லைகளில் கெடுபிடி இல்லை என்பதால், அவா்களில் பலா் போலந்திலிருந்து வேறு நாடுகளுக்கும் சென்றிருக்கலாம்.

இதுதவிர, போா் காரணமாக 70 லட்சம் போ் உக்ரைனுக்குள்ளேயே புலம் பெயா்ந்து உள்நாட்டு அகதிகளாகியுள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு!

அன்னைகளால் நிறைந்த உலகம்..

அன்னையர் தினம்: மோடிக்கு பரிசளித்த மக்கள்!

பெருமைப்பட வேண்டிய தருணம் -பிரக்ஞானந்தாவுக்கு ஆனந்த் மஹிந்திரா பாராட்டு

SCROLL FOR NEXT