தாய்லாந்து: மதுபான விடுதியில் தீ விபத்து; 13 பேர் பலி, 40 பேர் படுகாயம்
தாய்லாந்தில் இரவுநேர மதுபான விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 13 பேர் பலியாகினர். 40 பேர் படுகாயமடைந்தனர்.
தாய்லாந்தில் இரவுநேர மதுபான விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 13 பேர் பலியாகினர். 40 பேர் படுகாயமடைந்தனர்.
தாய்லாந்தின் கிழக்கு மாகாணமான சோன்புரில் உள்ள மவுண்டன் பி என்கிற இரவில் இயங்கும் மதுபான விடுதியில் இன்று அதிகாலை 1 மணி அளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்நிலையில், கூடம் முழுவதும் தீ சுற்றி வளைத்ததில் 4 பெண்கள், 9 ஆண்கள் உள்பட 13 பேர் உடல்கருகி பலியானோடு படுகாயமடைந்த 40 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
விபத்திற்கான காரணம் குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.