தாய்லாந்து: மதுபான விடுதியில் தீ விபத்து; 13 பேர் பலி, 40 பேர் படுகாயம்
தாய்லாந்தில் இரவுநேர மதுபான விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 13 பேர் பலியாகினர். 40 பேர் படுகாயமடைந்தனர்.
தாய்லாந்தில் இரவுநேர மதுபான விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 13 பேர் பலியாகினர். 40 பேர் படுகாயமடைந்தனர்.
தாய்லாந்தின் கிழக்கு மாகாணமான சோன்புரில் உள்ள மவுண்டன் பி என்கிற இரவில் இயங்கும் மதுபான விடுதியில் இன்று அதிகாலை 1 மணி அளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்நிலையில், கூடம் முழுவதும் தீ சுற்றி வளைத்ததில் 4 பெண்கள், 9 ஆண்கள் உள்பட 13 பேர் உடல்கருகி பலியானோடு படுகாயமடைந்த 40 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
Advertisement
Advertisement
விபத்திற்கான காரணம் குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.