முகப்பு
உலகம்

தாய்லாந்து: மதுபான விடுதியில் தீ விபத்து; 13 பேர் பலி, 40 பேர் படுகாயம்

தாய்லாந்தில் இரவுநேர மதுபான விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 13 பேர் பலியாகினர். 40 பேர் படுகாயமடைந்தனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

தாய்லாந்தில் இரவுநேர மதுபான விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 13 பேர் பலியாகினர். 40 பேர் படுகாயமடைந்தனர்.

தாய்லாந்தின் கிழக்கு மாகாணமான சோன்புரில் உள்ள மவுண்டன் பி என்கிற இரவில் இயங்கும் மதுபான விடுதியில் இன்று அதிகாலை 1 மணி அளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

இந்நிலையில், கூடம் முழுவதும் தீ சுற்றி வளைத்ததில் 4 பெண்கள், 9 ஆண்கள் உள்பட 13 பேர் உடல்கருகி பலியானோடு படுகாயமடைந்த 40 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

விபத்திற்கான காரணம் குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. 

முழு கட்டுரையைப் படிக்க →