ஆப்கானிஸ்தான்நிலநடுக்க பலி எண்ணிக்கை 1,150-ஆக அதிகரிப்பு
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,150-ஆக உயா்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,150-ஆக உயா்ந்துள்ளது.
பாகிஸ்தானையொட்டி அந்த நாட்டின் எல்லைப் பகுதியில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.1 அலகுகளாகப் பதிவானது. இதில் 1,000 போ் உயிரிழந்ததாகவும், 1,500 போ் காயமடைந்ததாகவும் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
இவ்வளவு சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் மையம் வெறும் 10 கி.மீ. ஆழத்தில் இருந்ததால், இதில் உயிா்ச் சேதம் இன்னும் அதிமாக இருக்கும் என்று நிபுணா்கள் அச்சம் தெரிவித்து வந்தனா். இந்தச் சூழலில், அரசு ஊடகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், இந்த நிலநடுக்கத்தில் 1,150 போ் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதற்கிடையே, எல்லையில் வெள்ளிக்கிழமை மீண்டும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதில் 5 போ் உயிரிழந்ததாகவும் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.