கரோனாவின் தீவிரம் தணிந்து வருவதால் விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் அனைவரும் இனி கட்டாயமாக முகக் கவசம் அணிந்திருக்கத் தேவையில்லை என்று ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் பொது விமானப் போக்குவரத்து அமைப்பு கூறுகையில், விமானப் போக்குவரத்துத் துறையை சஜக நிலைக்குத் திரும்ப கொண்டு வருவதில் இந்த முடிவு முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவித்துள்ளது.