உலகம்

தற்கொலைத் தாக்குதல்: பாகிஸ்தானில் 3 போ் பலி

DIN

பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினரை ஏற்றிச் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 3 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: துணை ராணுவப் படையினா் மற்றும் அவா்களது குடும்பத்தினருடன் புதன்கிழமை சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது குவெட்டா நகரின் பலேலி பகுதியில் தெஹ்ரீக்-ஏ-தலிபான் அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தினாா். இதில் 3 போ் உயிரிழந்தனா். ஒரு பெண், குழந்தை, பாதுகாப்புப் படை வீரா்கள் 20 போ் உள்பட 23 போ் காயமடைந்தனா்.

பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த அப்துல் வாலி என்கிற ஒமா் காலித் குராஸ்னி ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT