முகப்பு
உலகம்

பாகிஸ்தான்: 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹிந்து கோயில் மீண்டும் திறப்பு

பாகிஸ்தானில் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹிந்து கோயில் மீண்டும் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது.

Updated On : 5 ஆகஸ்ட் 2022, 4:04 pm IST
பகிர்:

பாகிஸ்தானில் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹிந்து கோயில் மீண்டும் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது.

பாகிஸ்தானின் லாகூர் நகரத்தில் உள்ள அனார்கலி பஜாரில் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹிந்து வழிபாட்டுத் தளமான வால்மீகி  கோயில் உள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்பும் அக்கோயிலில் வழிபாடுகள் நடைபெற்று வந்தன. பின், கிரிஸ்துவ குடும்பம் ஒன்று தங்களுக்கு சொந்தமான இடத்தில் கோயில் அமைந்துள்ளது என அப்பகுதியை ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.

Advertisement

Advertisement

இந்நிலையில், இதனை அறிந்த பாகிஸ்தான் சிறுபான்மை வழிபாட்டு மேற்பார்வை அமைப்பு ஒன்று சட்டரீதியாக வழக்கை நடத்தி 20 ஆண்டுகளுக்கு மேலாக அக்குடும்பத்தின் கட்டுப்பாட்டிலிருந்த கோயிலை மீட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, நேற்று அக்கோயில் திறக்கப்பட்டதும் உள்ளூரில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட ஹிந்து, முஸ்லீம், கிரிஸ்துவ மற்றும் சீக்கிய மதத் தலைவர்கள் கோயிலுக்குள் நுழைந்து வழிபட்டதுடன் பிரசாதத்தையும் பெற்றுக்கொண்டனர்.

மேலும், 1,200 ஆண்டுகள் பழமைகொண்ட கோயில் மீண்டும் திறக்கப்பட்டதால் அப்பகுதியில் உள்ள ஹிந்து மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments