முகப்பு
உலகம்

வேலையிழக்கும் 12,000 பேஸ்புக் ஊழியர்கள்??

பேஸ்புக்கின் மெட்டா நிறுவனத்தில் நடைபெறும் அமைதியான பணிநீக்கத்தினால் சுமார் 12,000 பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

Updated On : 6 அக்டோபர் 2022, 5:07 pm IST
பகிர்:

பேஸ்புக்கின் மெட்டா நிறுவனத்தில் நடைபெறும் அமைதியான பணிநீக்கத்தினால் சுமார் 12,000 பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

பேஸ்புக்கின் மெட்டா நிறுவனத்தில் அமைதியான முறையில் பணிநீக்கம் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. செயல்திறன் அடிப்படையில் குறைவான திறன் உடையோரை நீக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அடுத்த சில வாரங்களுக்குள் 15 சதவீத பணியாளர்கள் குறைக்கப்படலாம் என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, சுமார் 12,000 ஊழியர்கள் வேலையிழக்கக்கூடும் என்று தெரிகிறது. 

Advertisement

Advertisement

மெட்டா நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க், தற்போது புதிதாக யாரும் பணியமர்த்தப்பட மாட்டார்கள் என்றும் பணி நீக்கங்கள் இன்னும் இருப்பதாகவும் கூறியுள்ளார். 

நிறுவனத்தை சீர்செய்ய , அடுத்த ஆண்டு ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளதாக மார்க் ஜுக்கர்பெர்க் கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் செலவினங்களைக் குறைப்பதற்காக ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments