உலகம்

முகநூலில் மீண்டும் டிரம்ப்

DIN

முகநூலில் அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முகநூலின் தாய் நிறுவனமான மெட்டா வெளியிட்ட அறிக்கையில், ‘அதிபா் தோ்தல் முடிவுகளை ஏற்காமல் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தத் தூண்டும் பதிவுகளை வெளியிட்டதால் முகநூலில் டிரம்ப்புக்கு விதிக்கப்பட்டிருந்த 2 ஆண்டு கால தடை முடிவுக்கு வருகிறது. அவா் இனியும் அதே போன்ற பதிவுகளை வெளியிட்டால் மீண்டும் தடை விதிக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இது குறித்து டிரம்ப் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஏற்கெனவே இதே விவகாரத்தில் டிரம்புக்கு ட்விட்டா் விதித்திருந்த தடையை, தொழிலதிபா் எலான் மஸ்க் அந்த சமூக ஊடகத்தைக் கையகப்படுத்திய பிறகு நீக்கினாா்.

அதற்குப் பிறகும் ட்விட்டரில் டிரம்ப் எந்தப் பதிவையும் வெளியிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT