ஆஸ்கர் வென்ற ஆவணப் படத்தில் பணியாற்றிய ஆர்வலர் சுட்டுக்கொலை!
ஆஸ்கர் வென்ற ஆவணப் படத்தில் பணியாற்றிய பாலஸ்தீன ஆர்வலர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து...
மேற்கு கரைப் பகுதியில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளரால், பாலஸ்தீன ஆர்வலர் மற்றும் ஆசிரியரான ஒடேஹ் முஹம்மது ஹதாலின் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பாலஸ்தீன சமூகத்தின் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் ராணுவ வீரர்களின் வன்முறைகள் குறித்து “நோ அதர் லேண்ட்” எனும் ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. இந்த ஆவணப் படமானது, மார்ச் மாதம் சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றது.
இந்த ஆவணப் படத்தை இயக்கிய இயக்குநர்களுக்கு, பெருமளவில் தரவுகள் வழங்கி அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர், பாலஸ்தீன ஆர்வலரும், ஆசிரியருமான ஒடேஹ் முஹம்மது ஹதாலின்.
Advertisement
Advertisement
மசாஃபர் யட்டா பகுதியிலுள்ள உம் அல்-கெயிர் எனும் கிராமத்தில், ஆக்கிரமிப்பாளர்கள் நடத்திய தாக்குதலின் போது, ஹதாலின் சுட்டுக்கொல்லப்பட்டதாக, பாலஸ்தீன அதிகாரத்தின் கல்வித்துறை அமைச்சகம் நேற்று (ஜூலை 28) உறுதி செய்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து இஸ்ரேல் காவல் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், ஒரு இஸ்ரேலியர் மற்றும் 4 பாலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், ஹதாலின் கொல்லப்பட்டதற்கு, ”நோ அதர் லேண்ட்” ஆவணப் படத்தின் இயக்குநர்களான இஸ்ரேல் பத்திரிகையாளர் யுவல் ஆப்ரஹாம் மற்றும் பாலஸ்தீன பத்திரிகையாளார் பசெல் அட்ரா ஆகியோர் தங்களது எக்ஸ் தளப் பக்கங்களில், இரங்கல்களையும், கண்டனங்களையும் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிக்க: இம்ரான் கானின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு!
Palestinian activist Odeh Muhammad Hadalin was shot dead by Israeli occupation forces in the West Bank.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.