கீவ் நகரில் ரஷியா வான்வழியாக தீவிர தாக்குதல் படம் | AP
உலகம்

உக்ரைனில் 800 ட்ரோன்கள் ஏவி ரஷியா தீவிர தாக்குதல்..!

உக்ரைனில் ரஷியாவின் வான்வழியாக தீவிர தாக்குதல் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

உக்ரைனில் 800-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ஏவி ரஷியா ஞாயிற்றுக்கிழமை(செப். 7) தீவிர தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனில் ரஷியா ராணுவ படையெடுப்பை தொடங்கி 3 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், அதன்பின் நடத்தப்பட்டுள்ள மிகப்பெரியளவிலான வான்வழி தாக்குதலாக இன்றைய தாக்குதல் அமைந்துள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இதர பகுதிகளில் 805 ட்ரோன்களை ஏவி தொடரப்பட்ட ரஷியாவின் இந்த தாக்குதல்களில் ஒரு சில முக்கிய அரசு கட்டடங்கள் சேதமடைந்திருப்பதாகவும், இந்த தாக்குதல்களில் இருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 வகையான ஏவுகணைகள் மூலமாகவும் உக்ரைனில் ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். அவற்றில் 747 ட்ரோன்கள், 4 ஏவுகணைகள் வானிலேயே இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் உக்ரைன் விமானப்படையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்றாண்டுகளைக் கடந்தும் நீடிக்கும் உக்ரைன் மீதான ரஷியாவின் போரால் எரிபொருள் விலை உயா்வு உள்பட பல்வேறு பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளன. அவை உலகை பெரிதும் பாதிக்கின்றன. குறிப்பாக தெற்குலக நாடுகள் பாதிக்கப்படுகின்றன என்ற கருத்தை ஐ.நா. பொதுச் சபை விவாதத்தில் இந்தியா முன் வைத்தது.

இந்த நிலையில், உக்ரைன் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் குறித்து இந்தியா - பிரான்ஸ் தலைவர்கள் சனிக்கிழமை(செப். 6) தொலைபேசி வழியாக ஆலோசனை நடத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே, ரஷியாவின் ட்ரோன் தாக்குதல் உலகளவில் கண்டனத்தை பெற்றுள்ளது.

Russia attacked Ukraine with 805 drones and decoys

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

TTV Dhinakaran கூட்டணியிலிருந்து விலக நயினார் நாகேந்திரன் காரணமா? குற்றச்சாட்டும் பதிலும்!

ரூ.1.88 லட்சத்துக்கு லட்டு ஏலம் வென்ற தெலங்கானா முஸ்லிம் பெண்!

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை எதிரொலி: பெரும் போராட்டம் வெடித்தது!

விழிகளில் ஒரு வானவில்... ஸ்ரீலீலா!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பிஆர்எஸ் கட்சியும் புறக்கணிப்பு!

SCROLL FOR NEXT