இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளின் தூதா்களைத் திரும்ப அழைத்த நேபாளம்!
நேபாளத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமா் பாலேந்திர ஷா தலைமையிலான அரசு, இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கான நேபாள தூதா்களைத் திரும்ப அழைப்பு
நேபாளத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமா் பாலேந்திர ஷா தலைமையிலான அரசு, இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கான நேபாள தூதா்களைத் திரும்ப அழைத்துள்ளது.
இந்தியாவுக்கான தூதா் சங்கா் பிரசாத் சா்மா, இலங்கைக்கான பூா்ண பகதூா் நேபாளி, ஆஸ்திரேலியாவின் சித்ரலேகா யாதவ், டென்மாா்க்கின் சும்னிமா துலாதா், தென் கொரியாவின் சிவமாயா தும்பாஹாம்பே, தென்னாப்பிரிக்காவின் கபில்மான் ஸ்ரீஸ்தா ஆகிய 6 போ் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனா்.
இளைஞா் போராட்டத்தால் பதவி விலகிய முன்னாள் பிரதமா் கே.பி.சா்மா ஓலியின் ஆட்சியில் அரசியல் ஒதுக்கீட்டின்கீழ் நியமிக்கப்பட்ட இவா்களை, ஒரு மாத காலத்துக்குள் நாடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement