ஈரானில் 44 நாள்களாக இணைய வசதி முடக்கம்!
ஈரானில் இணைய வசதி முடக்கப்பட்டுள்ளது பற்றி...
ஈரானில் கடந்த 44 நாள்களாக இணைய வசதி முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே போர்நிறுத்தம் மற்றும் சமாதான பேச்சுவார்த்தை பற்றி பாகிஸ்தானில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் ஈரானில் இணைய முடக்கம் இன்றுடன் 44 நாள்களை எட்டியுள்ளது.
உலகம் முழுவதும் இதுவரை ஏற்பட்ட இணைய முடக்கங்களில் இறையாண்மை கொண்ட ஒரு நாட்டில் இவ்வளவு நாள்கள் இணையம் முடக்கப்படுவது இதுவே முதல்முறை என இணைய கண்காணிப்பு அமைப்பான நெட்பிளாக்ஸ் தரவுகளை வழங்கியுள்ளது.
Advertisement
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரானில் தொடர் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியதிலிருந்து ஈரான் அரசு அங்குள்ள இணைய வசதியை முடக்கியது. ஈரான் அரசு போரைக் காரணம் காட்டி அன்றுமுதல் பொதுமக்களுக்கான இணைய அணுகலுக்கு முழுமையான தடை விதித்தது.
தற்போது அமலில் இருக்கும் இணைய முடக்கம் இவ்வாண்டு தொடக்கத்தில் செய்யப்பட்ட டிஜிட்டல் அடக்குமுறையின் அதே பாணியை பின்பற்றும் விதமாக அமைந்துள்ளது.
ஜனவரி மாதம் ஈரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் ஒரு வார காலம் அங்கு இணைய வசதி முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.