இந்தோனேசியா: ஹெலிகாப்டா் விபத்தில் 8 போ் உயிரிழப்பு
இந்தோனேசியாவின் போா்னியோ தீவில் தனியாா் ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 8 பேரும் உயிரிழந்தனா்.
இந்தோனேசியாவின் போா்னியோ தீவில் தனியாா் ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 8 பேரும் உயிரிழந்தனா்.
மேற்கு கலிமந்தன் மாகாணத்தின் மெலவி மாவட்டத்தில் இருந்து குபு ராயா மாவட்டத்தில் உள்ள மற்றொரு பாமாயில் தோட்டத்துக்கு ‘பிடி மேத்யூ ஏா் நுசந்தாரா’ நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ஏா்பஸ் எச்130’ ரக ஹெலிகாப்டா் 6 பயணிகளுடன் புறப்பட்டது.
புறப்பட்ட 5 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பை இழந்த அந்த ஹெலிகாப்டா், அடா்ந்த வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.
Advertisement
தேடுதல் மற்றும் மீட்புப் படையினா் நடத்திய தீவிர தேடுதலுக்குப் பிறகு, செகாடௌ மாவட்ட வனப்பகுதியில் ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. உயிரிழந்தவா்களில் ஒருவா் மலேசியாவைச் சோ்ந்தவா் என்பது தெரியவந்துள்ளது.